என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
நீங்கள் தேடியது "கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்"
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பட்டியலில் திருச்சி மாவட்டத்தை சேர்க்கவும், மணப்பாறை, மருங்காபுரி ஆகிய தாலுகா பகுதிகளையும் பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவிக்க வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மணப்பாறை:
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பட்டியலில் திருச்சி மாவட்டத்தை சேர்க்கவும், மணப்பாறை, மருங்காபுரி ஆகிய தாலுகா பகுதிகளையும் பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவிக்க வலியுறுத்தி திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள பெரியார் சிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றியச் செயலாளர் தங்கராசு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புறநகர் மாவட்டச் செயலாளர் இந்திரஜி, துணைச் செயலாளர் பழனிச்சாமி, மாவட்டக்குழு தட்சிணாமூர்த்தி, நகரச் செயலாளர் உசேன், ஒன்றியச் செயலாளர்கள் சண்முகானந்தம், வெள்ளக்கண்ணு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கோரிக்கை குறித்து பேசினர்.
இதைத் தொடர்ந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை, புளியமரம், மாமரம், எலும்பிச்சை, தேக்கு, வேப்பமரம், பப்பாளி, வாழை மற்றும் பல்வேறு விலை உயர்ந்த மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும், முறையாக புள்ளி விபரக்கணக்கை எடுக்க வேண்டும், விவசாய பயிர்களாக நெல், காய்கனி, மலர், பாகற்காய், புடலங்காய் உள்ளிட்டவைகளும், அதற்காக அமைக்கப்பட்ட பந்தல்களுக்கும் கூடுதல் நிவாரணம் வழங்கிட வேண்டும், புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் கான்கீரிட் வீடுகள் கட்டித் தர வேண்டும், மணப்பாறை, மருங்காபுரி தாலுகா பகுதியை பேரிடர் பாதித்த பகுதியாக அவிறிக்க வேண்டும், தரமான மின்கம்பங்கள் நட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விளக்கி கண்டன கோசங்கள் எழுப்பினர்.
தொட்டியம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காட்டுப் புத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு சொத்து வரி உள்ளிட்ட வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொட்டியம்:
திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காட்டுப் புத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு சொத்து வரி உள்ளிட்ட வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பட்டத்திற்கு கிளைச்செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் ரெங்கசாமி, ராஜீ, அய்யாச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமநாதன் சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் மற்றும் குடிநீர் இணைப்பு உயர்வை ரத்து செய்ய வேண்டும், குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம், சுகாதாரம் ஆகியவற்றை தடையின்றி வழங்க உத்திரவாதம் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். பகுதி செயலாளர்கள் புத்தூர் நடராஜன், சிவமணி, சிவக்குமார், அவினாசியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X